‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற கூற்றுக்கிணங்க நாம் நோயின்றி வாழ வேண்டுமானால் எமக்கு அத்தியாவசியமாக காணப்படுவது ஆரோக்கியமான உணவு ஆகும் . உணவு இல்லையேல் எம்மால் உயிர் வாழ முடியாது . உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அடிப்படை தேவையான காணப்படுகின்றது . நாம் உண்ணும் உணவானது போசணை நிறைந்ததாக இருக்க வேண்டும் . நாம் உட்கொள்ளும் உணவுகள் இயற்கை உணவாக இருக்க வேண்டும் .
நாம் தினமும் மூன்று வேலைகள் உணவு உண்ண வேண்டும் . அதாவது காலை, மதியம், இரவு என்றவாறு அமைய வேண்டும் . இதில் கட்டாயமாக காலை உணவும் இரவு உணவும் உண்ணுவது அவசியம் . நாம் ஏன் உணவு உட்கொள்ள வேண்டுமென்றால்
- எமது உடல் வளர்ச்சிக்கு
- நாம் நோயின்றி வாழ்வதற்கு
- எமது உடலுக்குத் தேவையான சக்தியை பெற்றுக் கொள்வதற்கு
போன்ற காரணங்களுக்காக நாம் கட்டாயமாக உணவு உண்ண வேண்டியிருக்கின்றது . நாம் உணவு உண்ணும் பழக்கத்தை நேரம் தவறி உண்ணுவோமேயானால் பல்வேறுபட்ட தீங்குகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும் .
நாம் உண்ணும் உணவு கலப்புணவாக இருப்பது அவசியமாகும் . அதாவது ஒருவேளை உணவாவது கலப்புணவாக இருப்பது கட்டாயம் ஆகும் . கலப்பு உணவு என்பது நாம் உண்ணும் உணவில் அனைத்துப் போசணைக் கூறுகளும் சேர்ந்து இருப்பது கலப்பு உணவு ஆகும் . கலப்பு உணவு வேளைக்கு உகந்தது மதிய வேளையாகும் . எங்களால் மூன்று வேளையும் கலப்புணவை உண்ண முடியாது . எனவே நாம் மதிய உணவை பெரும்பாலும் கலப்புணவாக உண்பதே எமக்கு சிறந்ததாகும் .
நாம் உண்ணும் உணவில் பல போசணை கூறுகள் காணப்படுகின்றன . அவை அனைத்தும் எமக்கு கட்டாயமாக தேவைப்படுகின்றவை ஆகும் . போசணை கக் கூறுகளில் ஒன்றின் அளவு கூட குறைந்தால் எமக்கு பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
உணவில் காணப்படும் போசணைக் கூறுகள்
- மாப்பொருள் சத்து
- புரதச்சத்து
- கொழுப்பு சத்து
- விற்றமின்
- கனியுப்பு
போன்ற சத்துக்கள் உணவில் அடங்கியுள்ள மிக முக்கியமான சத்துக்களாகும் . இவை எமது உடலின் இயக்கத்துக்கு பெரிதும் உதவுகின்றன .
போசணைக் கூறுகளும் அவற்றின் தொழிற்பாடுகளும்
- நாம் உண்ணும் உணவில் அதிகளவு மாப்பொருளினை சேர்த்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது .
- நான் உண்ணும் உணவில் அதிகளவு புரதத்தினை சேர்த்துக் கொள்வதினால் எமது உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது .
- கொழுப்பு உணவினை உண்பதன் மூலம் உடலுக்கு தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம் .
- நாம் உண்ணும் உணவில் விற்றமின், கனியுப்பு காணப்படுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகம் பெற்றுக் கொள்ளலாம் .
போசணைக் குறைபாடுகளும் அதனால் ஏற்படும் நோய்களும்
- புரதச்சத்து குறைபாட்டினால் குவாசியாக்கோர் நோய் ஏற்படுகின்றது .
- விற்றமின் A குறைபாட்டால் மாலைக்கண் எனும் நோய் ஏற்படுகின்றது .
- விற்றமின் B குறைபாட்டால் பெரிபெரி நோய் ஏற்படுகின்றது .
- விற்றமின் C குறைபாட்டால் ஸ்கேவி நோய் ஏற்படுகின்றது .
- விற்றமின் D குறைபாட்டால் என் புருக்கி நோய் ஏற்படுகின்றது .
- விற்றமின் E குறைபாட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது .
- விற்றமின் K குறைபட்டால் குருதி உறையாத் தன்மை ஏற்படுகின்றது .
- நாம் உண்ணும் உணவில் இரும்பு சத்து குறைபாடு ஏற்படும் மாயின் குருதிச் சோகை நோய் ஏற்படும் . அத்துடன் எமது உடல் சோர்வாக காணப்படும் .
- நான் உண்ணும் உணவில் கல்சியம் குறைவாகக் காணப்படும் போது மற்றும் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும் .
- அயடின் குறைபாடு காரணமாக எனக்கு எளிய கழலை நோய் ஏற்படுகின்றது . அத்துடன் ஞாபக சக்தி குறைவடைகின்றது .
நாம் உண்ணும் உணவுகளில் இவ் போசணைக் கூறுகளின் குறைபாட்டால் மேற்கூறப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றது . இதனால் எமது உடல் ஆரோக்கியமானது பாதிப்படைகின்றது .
இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் நாகரிகம் வளர வளர எமது உணவிலும் நாம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம் உணவுப் பழக்கமானது பல்வேறுபட்ட நோய்களையே தருகின்றது அதாவது துரித உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்கின்றோம் இவற்றை உண்பதால்
- அதிகரித்த உடற்பருமன்
- புற்றுநோய்
- நீரிழிவு நோய்
- இதய நோய்கள்
- உயர் ரத்த அழுத்தம்
போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவ் நோய்கள் தொற்றாத நோய்களுக்குள் அடங்குகின்றன . எனவே நாம் கடைகளில் சென்று சாப்பிடும் பழக்கத்தை விட்டு வீட்டில் சமைத்து சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுதல் வேண்டும் . இதுவே எமக்கு சிறந்த வழிமுறையாகும் .
நாம் இன்று இயற்கை உணவுகளை உண்பதை தவிர்த்து உடன் உணவு வகைகள் அல்லது துரித உணவு வகைகள், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் நிறைந்த உணவுகள், குளிர் பானங்கள் என்று பல்வேறுபட்ட உணவு வகைகளை இன்று அதிகம் உண்கின்றோம் . இதனால் எமக்கு பல தீமைகளே ஏற்படுகின்றன . அது மட்டுமின்றி நான் அசுத்தம் அடைந்த உணவுகளை எமக்குத் தெரியாமலேயே உண்கின்றோம் . இதுவும் எனக்கு தீங்குகளை ஏற்படுத்துகின்றது உணவானது பல்வேறு வழிகளில் மாசடைகின்றது .
உணவு அசுத்தம் அடையும் வழிமுறைகள்
- சமைத்த உணவுகளை மூடி வைக்காத பொழுது அதற்குள் தூசு, அழுக்குகள் விழுவதன் மூலம் உணவு மாசடைகின்றது.
- உணவு சமைக்கும் சமையலறைக்குள் நாய், பூனை மற்றும் கரப்பான் பூச்சிகள் நடமாடி திரிதல் .
- சமைத்த உணவுகளின் மீது ஈக்கள் வைப்பதன் மூலம் உணவானது மாசடைகின்றது .
- உணவுகளில் பல்லிகள் விழுதல் அல்லது நக்குதல் மூலம் உணவு மாசடைகின்றது .
- அழுக்கடைந்த பாத்திரங்களில் உணவை சமைத்தல் மற்றும் உணவை பரிமாறுவதன் மூலம் உணவானது மாசடைகின்றது .
- காலாவதி திகதி முடிந்த உணவுப் பொருட்களை சமைப்பதன் மூலம் உணவு மாசடைகின்றது .
இது போன்ற பல்வேறு காரணங்களினால் நாம் சமைத்த உணவானது மேற்கூறப்பட்ட வழிகளின் மூலம் மாசடைகின்றது . இதனை தடுப்பதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்றன . இதை நாம் பின்பற்றி உணவின் பாதுகாப்பை பேண வேண்டும் .
உணவு மாசடைவதை தடுக்கும் வழிமுறைகள்
- உணவு சமைக்கும் போது சுத்தமான பாத்திரங்களில் உணவுகளை சமைக்க வேண்டும் .
- சமைத்த பின் உணவுகளை உரிய முறையில் மூடி வைத்தல் வேண்டும் .
- சமையலறைக்குள் பிராணிகள் உள்நுழைவது அல்லது நடமாடுவதை தவிர்ப்பதன் மூலம் உணவு மாசடைவதை தவிர்க்க முடியும்
- உணவு சமைப்பவர் தன்னை சுய சுத்தம் செய்து கொள்ளுதல் வேண்டும் அது மட்டுமின்றி சமைக்கும் போது ஏப்ரன் அணிய வேண்டும் .
- உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதன் காலாவதி திகதியைப் பார்த்து வாங்குதல் வேண்டும் .
- உணவு சமைக்கும் ஒருவர் சுகாதார முறைப்படி உணவுகளை சமைத்தல் வேண்டும் .
மேற்கூறப்பட்டமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உணவு மாசடைவதை தடுக்க முடியும் இதனால் எங்களின் ஆரோக்கியத்தை பேண முடியும் .
உணவானது நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது . இதனால் நாம் உணவினை மிகவும் சுகாதார முறைப்படியும் ஆரோக்கியமான முறையிலும் சமைத்து உண்ணுதல் வேண்டும் . இவ்வாறு உண்பதன் மூலம் எனது உடல் நலத்தினை மேம்படுத்த முடியும் . நாம் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு உணவு பழக்க வழக்கங்கள் மிகவும் அவசியமானதாகும் .
